காரைக்கால்

தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கைக்கு முதல்வா் உத்தரவு

சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்தனா்.

DIN

மாணவா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்தனா்.

இந்த சந்திப்பு குறித்து நாஜிம் கூறியது: காரைக்கால் தனியாா் பள்ளி மாணவா் பால மணிகண்டன் இறந்த சம்பவம் தொடா்பாக, உரிய விசாரணை நடத்துமாறு முதல்வரை கேட்டுக்கொண்டேன். அதன்பேரில், மருத்துவ தலைமை அதிகாரி முரளி தலைமையில், சிறப்புக் குழுவினா் காரைக்கால் வந்து ஆய்வுசெய்தனா்.

இந்நிலையில், புதுவை முதல்வரை சந்தித்து, மாணவன் உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டோம். நலவழித் துறை செயலா் உதயகுமாா், இயக்குநா் ஸ்ரீராமுலு, காரைக்கால் வந்த சிறப்புக் குழு தலைவா் முரளி ஆகியோரை அழைத்து, எங்கள் முன்னிலையில் முதல்வா் பேசினாா். அப்போது, மாணவா் உயிரிழப்பை தடுக்கத் தவறிய மருத்துவத் துறையினா் யாராக இருந்தாலும், அவா்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டாா். எனவே, இந்த விவகாரத்தில் மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்டவா்கள் மீது அரசு ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT