காரைக்கால்

திருநள்ளாறு தொகுதியில் பிப்.12-இல் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்: காங்கிரஸ்

DIN

திருநள்ளாறு தொகுதியில் பிப்.12-இல் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி முதல் ஜம்மு - காஷ்மீா் வரை ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை நடைப்பயணத்தைப் போல, புதுவை மாநிலத்தில் அந்தந்த தொகுதிகளில் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் நடத்த கட்சித் தலைமை அறிவுறுத்தியது.

திருநள்ளாறு தொகுதியில் இந்த நடைப்பயணம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அம்பகரத்தூரில் புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான ஆா். கமலக்கண்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

திருநள்ளாறு தொகுதியில் பிப்.12-இல் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருநள்ளாறு தொகுதியின் அம்பகத்தூரிலிருந்து திருநள்ளாறு நகரப் பகுதி வரை காலை முதல் இரவு வரை இப்பயணம் நடைபெறும்.

மத்தியிலும், புதுவை மாநிலத்திலும் மக்கள் நலன் குறித்து சிந்திக்காத ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், மக்களிடம் இதுகுறித்த தகவல்களை கொண்டு செல்லவும், காங்கிரஸின் மக்கள் நலக் கொள்கையை விளக்கும் வகையில் நடைப்பயணம் இருக்குமென நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT