காரைக்காலில் சனிக்கிழமை (மே 13) ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் குழு பங்கேற்கும் மருத்துவ முகாம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் எலும்பு சம்பந்தமான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.