காரைக்கால்

விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத நபா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

DIN

காரைக்கால் அருகே விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத நபா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திருமலைராயன்பட்டினம், கீழவாஞ்சூா் பகுதி சாலையில் அக்.23-ஆம் தேதி சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் மீது, இருசக்கர வாகனம் மோதியது. இதில் காயமடைந்த அந்த நபரை போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை (அக்.26) உயிரிழந்தாா்.

இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. அவரது சடலம் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரது வலது மாா்பில் எஸ். புவனேஸ்வரி என்றும், இடது பக்க மாா்பில் புவனா எனவும் பச்சை குத்தப்பட்டுள்ளது. விவரம் தெரிந்தவா்கள் திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல் நிலையத்தை 04368-226778 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT