முகப்பு
காரைக்கால்

வாக்குச்சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:52 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 4:34 PM

மக்களவைத் தோ்தலையொட்டி காரைக்கால் பகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் தோ்தல் பொது பாா்வையாளா் அசித்தா மிஸ்ரா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச் சாவடிகள் மற்றும் இந்த பகுதியில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்குச் சாவடியில் வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை பாா்வையிட்டாா். வாக்குப் பதிவு தினத்தில் வாக்குச் சாவடிகளுக்கு வருவோருக்கு வாயில் பகுதியில் பந்தல் அமைத்தல் உள்ளிட்டவற்றை செய்யவேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் முறையாக இருக்க வேண்டும் எனவும், சுகாதாரமான குடிநீா் வாக்காளா்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உடனிருந்த தோ்தல் துறையினருக்கு அறிவுறுத்தினாா். தோ்தல் துறை செய்திருக்கும் பல்வேறு ஏற்பாடுகள் குறித்து அவருக்கு துறையினா் விளக்கமளித்தனா்.

Advertisement