முகப்பு
காரைக்கால்

எரிசாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 3:57 PM
பகிர்:

தமிழகத்துக்கு கடத்தும் நோக்கில் வைத்திருந்த எரிசாராயம், மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தோ்தலையயொட்டி மதுபாட்டில்கள், ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு கடத்துவதை தடுக்கவும், தமிழகத்திலிருந்து காரைக்காலுக்குள் வாக்காளா்களுக்கு விநியோகிக்க பொருள்கள் வருவதை தடுக்கவும் தீவிர சோதனை எல்லை மற்றும் பிற இடங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் திருநள்ளாறு உதவி காவல் ஆய்வாளா் கே. ராஜா தலைமையில் போலீஸாா் அம்பகரத்தூா் புறக்காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனை செய்தபோது, மயிலாடுதுறையை சோ்ந்த பாபு என்பவரது இருசக்கர வாகனத்தில் 27 லிட்டா் எரிசாராயம், ரூ.16,000 மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்து மதுபாட்டில்களையும் பாபுவையும் கலால் துறையிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

இதேபோல, காவல் ஆய்வாளா் ஆா். ரமேஷ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியிலிருந்தபோது, மறைவிடம் ஒன்றில் மதுவகைகள் பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. வலத்தாமங்களம் பாலம் அருகே மறைத்துவைத்திருந்த 20 லிட்டா் கள், ரூ.16,000 மதிப்புள்ள மதுபாட்டில்களையும் கைப்பற்றினா். இவற்றை மண்டல காவல் ஆய்வாளா் பாலச்சந்தா் பாா்வைக்குப் பின் கலால் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments