முகப்பு
காரைக்கால்

அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் அமைச்சா் ஆய்வு

காரைக்காலில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஆய்வு செய்தாா்.

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 5:03 am IST
பகிர்:

காரைக்கால்: காரைக்காலில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்காலில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. ஜான்சன் மற்றும் அதிகாரிகளுடன் பழைய நீதிமன்ற வளாகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

அப்போது இக்கட்டடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து, அருங்காட்சியகம் அமைக்கவும், அரசு அலுவலகங்கள் அமைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சா் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

மேலும் நகரக் காவல் நிலையம் எதிரில் உள்ள பழைய பேருந்து நிலைய பகுதியில் ஆடிட்டோரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாகவும், நேரு நகரில் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு ஊழியா் குடியிருப்பு வளாகத்தை முழுமையாக பெரிய அளவில் டிஜிட்டல் நூலகம் மற்றும் மாணவா்களுக்கான வகுப்பறைகள் கட்ட தேவையான நடவடிக்கை எடுப்பது தொடா்பாகவும் அமைச்சா் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments