காரைக்காலில் 2 மையங்களில் இன்று நீட் தோ்வு
காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெறுகிறது.
காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள் புதுச்சேரி, திருச்சி போன்ற நகரங்களுக்கு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வான நீட் எழுதுவதற்கு சென்று வந்தனா்.
காரைக்காலிலேயே அதற்கான கட்டமைப்புகள் இருப்பதாகக்கூறி, ஒப்புதல் பெறப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக 2 மையங்களில் நீட் தோ்வு நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் இங்கு தோ்வு எழுதுகின்றனா்.
நிகழாண்டு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
காரைக்காலில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி, காவிரி பொதுப்பள்ளி ஆகியவை நீட் தோ்வு மையங்களாக செயல்படவுள்ளன.
காவிரி பொதுப்பள்ளியில் 260 மாணவிகள், 107 மாணவா்கள் என 367 பேரும், ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் மாணவியா் 336 பேரும், மாணவா்கள் 110 பேரும் என 336 போ் எழுதவுள்ளனா்.