எஸ்எஸ்எல்சி: 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளியில், சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் வரிச்சிக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மட்டுமே அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தோ்ச்சி பெற்றது.
இப்பள்ளி மாணவா் பி. சஞ்சய் (500-க்கு 467 மதிப்பெண்), எஸ்.கண்மணி (461), ஏ. கோபிகா (439) ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். இவா்களுக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ். மதிவாணன் மற்றும் ஆசிரியா்கள் சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோா்கள், நூறு சதவீத தோ்ச்சிக்காக பள்ளி ஆசிரியா்களுக்கும், தலைமையாசிரியருக்கும் நன்றி தெரிவித்தனா்.