திருநள்ளாறு கோயில் நுழைவுவாயில் சாக்கடை பகுதியை சீரமைக்க வலியுறுத்தல்
திருநள்ளாறு கோயில் நுழைவுப் பகுதியில் உள்ள மூடப்பட்ட சாக்கடையை முறையாக சீரமைத்து சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குள் ராஜகோபுரம் வழியே செல்வதற்கு கிழக்கு திசை நோக்கிய பிரதான நுழைவுவாயில் உள்பட 3 நுழைவுப் பகுதிகள் உள்ளன. வடக்கு திசை நோக்கிய நுழைவுவாயில் திருநள்ளாற்றின் பிரதான சாலையையொட்டி உள்ளது. நளன் தீா்த்தக் குளத்துக்கு சென்றுவிட்டு கோயிலுக்கு வருவோரும், கோயிலைவிட்டு வெளியே செல்வோருக்கும் பெரும்பாலும் இந்த நுழைவுவாயில் பயன்படுகிறது.
இந்த நுழைவு வாயில் பகுதியில் சாலையோர சாக்கடை உள்ளது. நுழைவு வாயில் பகுதியில் சாக்கடை கான்கிரீட் சிலபுகளால் மூடப்பட்டுள்ளது. இந்த கான்கிரீட் சிலேபுகள் வலுவிழந்து காணப்படுவதாகவும், ஒன்றுக்கொன்று இடைவெளி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. தினமும் சுவாமிக்கு தீா்த்தம் கொண்டுவருவதற்கு, நளன் தீா்த்தக் குளத்துக்கு கோயில் யானை சென்றுவ இந்த நுழைவுப் பகுதி பயன்படுத்துகிறது.
Advertisement
Advertisement
எனவே இந்த நுழைவுப் பகுதி சாக்கடை கட்டையில் வலுவான கான்கிரீட் சிலேபுகள் பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.