எஸ்எஸ்பி நியமனம்
காரைக்காலுக்கு புதிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பெண் ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி செளஜன்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்காலுக்கு புதிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பெண் ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி செளஜன்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக மணிஷ் பணியாற்றிவந்த நிலையில், அவரை மத்திய உள்துறை அமைச்சகம் அருணாசலப் பிரதேசத்துக்கு பணியிடமாற்றம் செய்தது.
இந்நிலையில் ,புதுச்சேரி கிழக்கு எஸ்பியாக பணியாற்றிவந்த லட்சுமி செளஜன்யா ஐபிஎஸ் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து புதுவை தலைமைச் செயலா் சரத் செளஹான் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்எஸ்பி அடுத்த வாரம் பொறுப்பேற்பாா் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.