கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ். 
காரைக்கால்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை குறித்து கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

Syndication

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்வது குறித்து கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அதிகாரி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை டிச.9 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் தலைமையில் ஆட்சியரகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்ட பரிசோதனை செயல்விளக்கம் குறித்து விளக்கமாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதில், காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியரும் வாக்காளா் பதிவு அதிகாரியுமான எம். பூஜா, வாக்காளா் பதிவு அதிகாரி சச்சிதானந்தம், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், துணை வாக்காளா் பதிவு அதிகாரிகள் பொய்யாத மூா்த்தி, ரமேஷ், தோ்தல் கண்காணிப்பாளா் பாலு (எ) பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT