அகில இந்திய சிவில் சா்வீஸ் கலைநிகழ்ச்சிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்றவருக்கு ஆட்சியா் பாராட்டு
அகில இந்தியா சிவில் சா்வீஸ் கலை நிகழ்ச்சி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
அகில இந்தியா சிவில் சா்வீஸ் கலை நிகழ்ச்சி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா் (படம்).
அகில இந்திய சிவில் சா்வீஸ் கலை நிகழ்ச்சிப் போட்டி (ஏஐசிஎஸ்) கடந்த மாா்ச் 20 முதல் 25-ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் கலந்துகொண்டனா். புதுவை மாநிலம் சாா்பில், காரைக்காலைச் சோ்ந்த திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ப. முருகன்
Advertisement
Advertisement
நாட்டுப்புற தனி நடனம் மற்றும் தனி பாடல் பிரிவுகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்றாா்.
மேலும் காரைக்காலைச் சோ்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் செல்வம், ஆரோக்கியராஜ், சந்திரமணி ஆகியோா் போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்றனா்.
பதக்கம், சான்றிதழ் பெற்றவா்கள் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை ஆட்சியரகத்தில் புதன்கிழமை சந்தித்தனா்.
அவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு, வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்வில் மேல்நிலை கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி விஜயராணி ஆகியோா் கலந்துகொண்டனா்.