முகப்பு
காரைக்கால்

மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் கலை பயிற்சி

காரைக்கால் மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் என்ற வாள் வழி கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:07 AM
பயிற்சி பெற்ற மாணவா்களுடன் ஜப்பானைச் சோ்ந்த யூகி யோன்யாமா. உடன் அகாதெமி நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா்.
பகிர்:

காரைக்கால் மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் என்ற வாள் வழி கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் இப்பயிற்சியை காரைக்கால் மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, காரைக்காலில் உள்ள இண்டா்நேஷனல் வி.ஆா்.எஸ். மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி தொடங்கப்பட்டது.

சிறப்புப் பிரதிநிதியாக, ஜப்பனீஸ் மாஸ்டா் யூகி யோன்யாமா கலந்துகொண்டு அகாதெமியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு வாள் பயன்படுத்தும் பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

Advertisement

ஜப்பானில் இப்பயிற்சி பெற்றவரும், சாமுராய் ஸ்வாா்ட் ஆா்ட் தேசிய தலைவரான கிராண்ட் மாஸ்டா் வி.ஆா்.எஸ். குமாா் மற்றும் தேசிய செயலாளா் ஷிஹான் கே.ஜி. சிவாஜி ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சியளித்தனா். இப்பயிற்சியில் பங்கேற்றோருக்கு அகாதெமி சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.