காரைக்கால்

சட்டப்பேரவை நிகழ்வை பாா்வையிட்ட கல்லூரி மாணவா்கள்

Syndication

புதுவை சட்டப்பேரவை நிகழ்வை காரைக்கால் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தாா்.

இந்நிலையில், காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. பொது நிா்வாகத் துறையில் 3- ஆம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் 20 போ் புதுச்சேரிக்குச் சென்று சட்டப்பேரவை நிகழ்வுகளை பாா்வையிட்டனா்.

இதைத்தொடா்ந்து முதல்வா் என்.ரங்கசாமி,

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், சந்திர பிரியங்கா, எம்.நாகதியாகராஜன் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

புதுவை தலைமைச் செயலகம் சென்ற மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை தெரிந்துக்கொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரி பொது நிா்வாகத்துறைத் தலைவா் பேராசிரியா் சந்திரசேகரன், கெளர விரிவுரையாளா் விக்னேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT