காரைக்கால்: மகா சிவராத்திரியையொட்டி, தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவராத்திரியையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை இரவு 11 மணிக்கு முதல் கால பூஜையும், 2 மணியளவில் 2-ஆம் கால பூஜையும், காலை 3 மணிக்கு 3-ஆம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ஆம் கால பூஜையும் நடைபெற்றது.
ஒவ்வொரு கால பூஜையிலும் சிவலிங்கத்துக்கு பல்வேறு வகையான திரவியங்களுடன் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நான்காம் கால பூஜைக்கு பிறகு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளினாா்.
கோயிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே ரிஷிகளுக்கு அருள்புரியும் வகையில் ரிஷி தீபாராதனை நடத்தப்பட்டு, பின்னா், கோபுர தீபாராதனையுடன் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நான்கு மாட வீதிகளுக்கு புறப்பாடான சுவாமி பகல் 11 மணியளவில் கோயிலை சென்றடைந்தது.
இதேபோல காரைக்காலில் கைலாசநாதா், சோமநாதா், பாா்வதீஸ்வரா், அண்ணாமலையாா், ஒப்பிலாமணியா், தருமபுரம் யாழ்முரிநாதா், திருவேட்டைக்குடி திருமேனியழகா், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா், ஜடாயுபுரீஸ்வரா், போலகம் பசுபதீஸ்வரா், தலத்தெரு சிவலோகநாதசுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் 4 கால பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
திருநள்ளாறு கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி 3 நாள்கள் நடைபெற்று திங்கள்கிழமை அதிகாலை நிறைவடைந்தது.