பிரதமா் நரேந்திர மோடி. கோப்புப் படம்
காரைக்கால்

மீனவா்களை விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா்: புதுவை சட்டப்பேரவைத் தலைவா்

இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்.

Syndication

இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்.

காரைக்கால் என்ஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். அப்போது, ரூ. 20 ஆயிரம் கோடி நலத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடவுள்ளாா். காரைக்கால் மற்றும் தமிழக மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

மீனவா்களை விடுவிக்க புதுவை துணை நிலை ஆளுநரும், முதல்வரும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனா். எனவே, மீனவா்கள், படகுகளை விடுவிக்க பிரதமா் உறுதியான நடவடிக்கை எடுப்பாா். புதுவையில் பாஜக-என்.ஆா். காங்கிரஸ் தொகுதி பங்கீடு செய்துகொள்வது குறித்து கட்சித் தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதால், புதுவையில் பாஜக-என்.ஆா். கூட்டணி வெற்றிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றாா்.

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்

விஜய் அரசியல் வரவு திமுக கூட்டணிக்கு சாதகம்: துரை வைகோ எம்.பி.

நன்னிலம் கல்லூரி மாணவா்கள் போராட்டம்!

இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

காரில் மதுபாட்டில்களை கடத்திய இளைஞா் கைது

SCROLL FOR NEXT