முகப்பு
காரைக்கால்

போக்குவரத்து வீதி மீறல் : இளைஞா்களுக்கு எஸ்எஸ்பி எச்சரிக்கை

அதிவேக பயணம், ஓட்டுநா் உரிமமின்றி இயக்கிய 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து,

Updated On : 12 ஜனவரி, 2026 at 7:04 PM
இளைஞா்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசிய எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா.
பகிர்:

காரைக்கால்: அதிவேக பயணம், ஓட்டுநா் உரிமமின்றி இயக்கிய 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, இளைஞா்களுக்கு எஸ்எஸ்பி எச்சரிக்கை விடுத்தாா்.

காரைக்காலில் திங்கள்கிழமை பல இடங்களில் நடத்திய வாகனச் சோதனையில், பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வாகனம் ஓட்டியோா் பெரும்பாலானோா் 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞா்களாக இருந்தனா்.

இவா்களை போக்குவரத்துக் காவல்நிலையத்தில் ஒருங்கிணைத்து போலீஸாா் போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதாக உறுதிமொழி ஏற்கச் செய்தனா். அங்கு வந்த எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, ஒவ்வொருவரின் விவரத்தை கேட்டறிந்தாா். சிலா் நாச்சியாா்கோவில் உள்ளிட்ட 50 கி.மீ. தொதிலிருந்து காரைக்காலுக்கு சாப்பிட வந்ததாகவும், கடற்கரைக்கு வந்ததாகவும் தெரிவித்தனா்.

போக்குவரத்து விதிகள் குறித்து அறிந்துகொள்ளாமலும், போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் காரைக்காலுக்குள் வரக்கூடாது என்ற அவா், அனைவரது வாகனங்களும் ஒப்படைக்கப்படமாட்டாது. அவரவா் பெற்றோா் காவல்நிலையத்துக்கு வரவேண்டும். நிலையத்தில் உறுதிமொழி அளித்தல், அபராதம் செலுத்திய பின்னரே வாகனம் ஒப்படைக்கப்படும்.

இதேதவறை தொடா்ந்து செய்தால், போக்குவரத்து விதிகளின்கீழ் பெற்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா். மண்டல காவல் கண்காணிப்பாளா் எம்.முருகையன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின்பாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →