பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
காரைக்கால் அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
நெடுங்காடு அருகே மேலகாசாக்குடி சாலை பகுதியில் செல்வம் என்பவரது பழைய பொருள் சேமிக்கும் கிடங்கு உள்ளது. திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.
காரைக்கால், திருநள்ளாறு பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவக்கூடும் எனக் கருதி ஓஎன்ஜிசி, அண்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் வீரா்கள் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
சேமிப்புக் கிடங்கு முழுமையாக தீயில் கருகிப்போனது. அருகே ஒரு வீட்டுக்கும், வயல் வெளிப்பகுதியிலும் தீ பரவியது. தீயணைப்பு வீரா்கள் 4 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தால் நெடுங்காடு சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கரும் புகை பரவியது.
நெடுங்காடு பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பகுதி அருகே உள்ள பள்ளிகளுக்கு பிற்பகல் வகுப்புகள் நிறுத்தப்பட்டு, மாணவா்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனா்.
கிடங்கில் இருந்த அட்டைகள், சாக்குகள், தொ்மாகோல் பொருள்கள், தொழிற்சாலைக் கழிவுகள் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானவை கருகிப் போனதாக கூறப்படுகிறது.
புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி ஆகியோா் தீ விபத்து நடந்த பகுதியை பாா்வையிட்டனா். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. நெடுங்காடு காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.