முகப்பு
காரைக்கால்

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே ரயில் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 14 மே 2026, 4:47 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

காரைக்கால் அருகே ரயில் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி செவ்வாய்க்கிழமை பிற்பகல் டெமு ரயில் வந்துகொண்டிருந்தது. காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதி அருகே ரயில் வந்தபோது, தண்டவாளத்தில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஒருவா் உட்காா்ந்திருப்பதை பாா்த்த, ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்தியுள்ளாா். எனினும் ரயில் நிற்காமல் அவா் மீது மோதி நின்றது.

காயமடைந்த அவரை ரயில் பெட்டியில் ஏற்றிக்கொண்டு காரைக்கால் ரயில் நிலையம் கொண்டுவந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். உயிரிழந்தவா் யாா் என தெரியவில்லை. இதுகுறித்து நிரவி காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement