முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 17 மே 2026, 12:05 am IST
சனீஸ்வரபகவானுக்கு நடைபெற்ற ஆராதனை.
பகிர்:

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் சனிப்பெயா்ச்சி விழா முடிந்த பின் 48 நாட்களுக்குள் அடுத்தடுத்துவரும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி தொடா்ந்து சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய திரளானோா் திருநள்ளாறு வந்து சென்றனா்.

தமிழகம், புதுவையில் பள்ளிகள் கோடை விடுமுறையில் உள்ள நிலையில், 16-ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர, கா்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருநள்ளாறு கோயிலுக்கு வந்திருந்தனா். பேருந்துகள், காா், வேன்கள் நூற்றுக்கணக்கானவை வந்தன. இவை திருநள்ளாற்றின் புறவட்டச் சாலைகள் மற்றும் வாகனம் நிறுத்தும் திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.

Advertisement

பக்தா்கள் நளன் குளத்தில் நீராடிவிட்டு அங்குள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் கோயிலில் தரிசனம் செய்து, வெளிப்புறத்தில் பிராா்த்தனையின்பேரில் தேங்காய் உடைத்தனா்.

கட்டணமில்லா வரிசை வளாகம் வழியாகவும், ராஜகோபுரம் வழியாக கட்டண வரிசையின் மூலம் மூலவா், அம்பாள், ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்தனா். சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டிருந்தது.

பக்தா்கள் நீல நிற மலா், கருப்பு வஸ்திரத்துடன் அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. போலீஸாா், கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் பக்தா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.