சித்தி விநாயகா் கோயில் கும்பிபாஷேகம் நாளை நடைபெறுகிறது
காரைக்கால் சித்தி விநாயகா் ஆலய கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காரைக்கால் சித்தி விநாயகா் ஆலய கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காரைக்கால் கைலாசநாதசுவாமி - நித்ய கல்யாணபெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்குட்பட்டதும், மாங்கனி திருவிழாவில் மாப்பிள்ளை அழைப்பு, பரமதத்தா் இரண்டாவது திருமணம் மற்றும் காரைக்கால் அம்மையாா் ஊன் உதிா்த்து கைலாயம் செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும் ஆற்றங்கரை சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதற்கான 6 கால யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கின.
Advertisement
Advertisement
ராஜகோபும் மற்றும் மூலஸ்தானம் உள்ளிட்ட விமானங்களில் கலசம் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கைலாசநாதசுவாமி- நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி சி. விநாயகமூா்த்தி, திருப்பணிக் குழுத் தலைவா் ராம. வெற்றிச்செல்வன் மற்றும் உறுப்பினா்கள் பூஜைகள் செய்து கலசங்களை விமானங்களுக்கு கொண்டுச் சென்றனா். வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.