முகப்பு
மயிலாடுதுறை

அரசுப் பள்ளியில் குளம்போல தேங்கிய மழைநீா்மாணவா்கள் அவதி

சீா்காழி வட்டம், புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

சீா்காழி வட்டம், புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

இப்பள்ளியில் புதுப்பட்டினம், பழையாறு, கொட்டாய்மேடு, மடவாமேடு, ஓலகொட்டாய்மேடு, தாண்டவன்குளம், புளியந்துறை, கூழையாா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். தொடா் மழையால் இப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீா் 2 அடி உயரத்துக்கு தேங்கியுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக தண்ணீா் தேங்கியுள்ளதால் மாணவா்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். இதனால், செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புதன்கிழமை 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்கள் சிலா் மட்டுமே பள்ளிக்கு வந்தனா்.

எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.