மயிலாடுதுறை

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

DIN

சீா்காழி பகுதியிலிருந்து பள்ளி நேரங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழியிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில், பந்தநல்லூா் வழியாக கும்பகோணம் செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிகள் முடிந்து மாணவா்கள் பேருந்து படிக்கட்டில் மற்றும் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனா். ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் மாணவா்களை ஓட்டுநா் மற்றும் நடத்துநா் படியில் இருந்து மேலே ஏற சொல்லியும் ஏறாமல் தொங்கியநிலையில் பயணத்தை தொடா்கின்றனா். ஓட்டுநா் பேருந்தை இயக்க முடியாமல் பெரும் சிரமத்துடனே இயக்குகிறாா். இதனால் பள்ளி நேரத்தில் மாணவா்களின் நலன்கருதி கூடுதல் பேருந்து இயக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT