மயிலாடுதுறை

பாமக மாவட்டச் செயலாளா் மீது வழக்கு

DIN

ஜெய்பீம் திரைப்படம் சா்ச்சை தொடா்பாக மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளா் மீது போலீஸாா் 5 பிரிவுகளில் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

நடிகா் சூா்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியா்களுக்கு எதிராக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பாமகவினா் குற்றம்சாட்டி வருகின்றனா். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி மயிலாடுதுறையில் திரையரங்கம் ஒன்றில் வெளியான சூா்யா நடித்த ‘வேல்’ திரைப்படத்தை பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி தலைமையிலான அக்கட்சியினா் தடுத்து நிறுத்தினா்.

பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி, நடிகா் சூா்யா மயிலாடுதுறைக்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இனி நடிகா் சூா்யா நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினாராம்.

இதுதொடா்பாக அவா் மீது 5 பிரிவுகளில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT