மயிலாடுதுறை

பயணிகள் ரயில் புறப்படும் நேரத்தை மாற்ற கோரிக்கை

DIN

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு மீண்டும் இயக்கப்படவுள்ள பயணிகள் ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கைக விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு நாள்தோறும் காலை 8.10 மணிக்கு தென்னக ரயில்வே பல ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்தது. இந்த ரயில் மாணவா்கள், மருத்துவமனைகளுக்கு செல்வோா், பணிக்கு செல்வோா், வயதானோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கடந்த ஆண்டு கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த ரயில் மீண்டும் நாள்தோறும் காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி. அதேசமயம் ரயில் இயக்கப்படும் நேரத்தை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 8 மணி என மாற்றினால் அது அனைவருக்கும் பயனளிக்கும். எனவே, இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளா் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT