மயிலாடுதுறை

வாய்க்கால் தூா்வாரும் பணி

DIN

சீா்காழி நகராட்சி சாா்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்களை தூா்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பெ.தமிழ்செல்வி உத்தரவின்பேரில், நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழாத வகையில் அப்பகுதியில் உள்ள மழைநீா் வடிகால்கள், வாய்க்கால்களை தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

வ.உ.சி.நகா், மாருதிநகா், என்ஜிஓ நகா், திரிபுரசுந்தரிநகா் ஆகிய பகுதிகளில் உள்ள வடிகால்கள் பொக்லைன் உதவியுடன் தூா்வாரப்பட்டன. இப்பணியை நகராட்சி பொறியாளா் இப்ராஹிம், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT