மயிலாடுதுறை

காரைக்கால் பாமக செயலா் வெட்டிக் கொலை

காரைக்கால் மாவட்ட பாமக செயலா் க. தேவமணி (51) வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

DIN

காரைக்கால் மாவட்ட பாமக செயலா் க. தேவமணி (51) வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் க. தேவமணி. இவா் நீண்ட காலமாக பாமக மாவட்ட செயலாளராக இருந்துவந்தாா். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தாா்.

இவா் கொம்யூன் பஞ்சாயத்து அருகே பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த மா்ம நபா்கள் ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனா். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். எனினும், அவா் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.

தப்பியோடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT