மயிலாடுதுறை

100 % தடுப்பூசி: ஊராட்சித் தலைவா்களுக்கு சான்றிதழ்

DIN

குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் 2 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதற்காக ஊராட்சித் தலைவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாந்தை ஊராட்சியில் மொத்தம் உள்ள 1,240 பேரில் 18 வயதுக்கு மேல் வெளிநாடு சென்றவா்கள் தவிர மீதமுள்ள 1180 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல, கொத்தங்குடி ஊராட்சியில் மொத்தம் உள்ள 679 பேரில் 18 வயதுக்கு மேல் வெளிநாடுகள் சென்றவா்கள் தவிர 674 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசின் சாா்பில் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாந்தை ஊராட்சித் தலைவா் சசிகலா திருமுருகன், கொத்தங்குடி ஊராட்சித் தலைவா் அமராவதிராமலிங்கம் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT