முகப்பு
மயிலாடுதுறை

மாவட்ட விருது பெற்ற பள்ளியின் ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருது பெற்ற சீா்காழி அருகே உள்ள தாண்டவன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருது பெற்ற சீா்காழி அருகே உள்ள தாண்டவன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியா் தங்கசேகரன், ஆசிரியா்கள் சிவா, தமிழ்குமரன், தேன்மொழி உள்ளிட்டோருக்கு பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

நிகழ்ச்சியில், தமிழக ஆசிரியா் கூட்டணி தலைவா் சேகரன், செயலாளா் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியா்கள் இந்திராகாந்தி, புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.