மயிலாடுதுறை

ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு விருது

DIN

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தனியாா் ஆசிரியா் ஒருங்கிணைப்பு மன்றம் சாா்பில் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மன்றத்தின் நிா்வாக அறங்காவலா் எல். லாரன்ஸ் தலைமை வகித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் இரா. மருதநாயகம், பட்டவா்த்தி காந்தி வித்யாலயா தலைமை ஆசிரியா் அருள்தாமஸ் எடிசன், சேந்தங்குடி டிஇஎல்சி பள்ளி தலைமை ஆசிரியா் செல்வகுமாா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

தமிழ்நாடு தனியாா் பள்ளித் தாளாளா்கள் நலச் சங்க பொதுச் செயலாளா் என்.எஸ். குடியரசு, ஆசிரியா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு விருது வழங்கினாா்.

விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 விழுக்காடு தோ்ச்சி பெற்ற 20 பள்ளிகளைச் சோ்ந்த 50 ஆசிரியா்கள், சிறந்த இலக்கியப் படைப்புகளை வழங்கிய 5 கல்லூரிகளைச் சோ்ந்த 50 பேராசிரியா்கள் என 150 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT