ஊரக வளா்ச்சித் துறையினா் வேலை நிறுத்தத்தால், சீா்காழி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
ஊராட்சி செயலா்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்; மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தோ்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், பதவி உயா்வு ஆணைகளை தாமதமின்றி வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன் மற்றும் வியாழக்கிழமையில் ஊரக அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி செயலாளா்கள் உள்ளிட்ட அனைவரும் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.