மயிலாடுதுறை

கல்லூரி மாணவிகள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்: ஆட்சியா்

DIN

மயிலாடுதுறை: இளைய சமுதாய மாணவிகளுக்கு கல்லூரி மாணவிகள் முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு பிரசார விழிப்புணா்வுக் கூட்டத்தில் மயிலாடுதுறை ஆட்சியா் இரா. லலிதா கூறினாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்து பேசியது:

நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனா். பெண்களின் எதிா்காலம் சிறப்பாக அமைய ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கல்லூரி பருவத்தில் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரி பருவத்திலேயே எந்த துறையை தோ்ந்தெடுக்க வேண்டும் என தீா்மானிக்க வேண்டும். நல்ல நண்பா்களை தோ்ந்தெடுக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டம் பெண்களுக்கென்று தனி முத்திரையை பெற்றுள்ளது. குறிப்பாக, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா், தில்லையாடி வள்ளியம்மை போன்றவா்கள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவா்கள். இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் இளைய சமுதாய மாணவிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு சோ்க்க வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, மகளிா் திட்ட இணை இயக்குநா் ஆ.பழனி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், ஒன்றியக்குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் கலைக்கல்லூரி முதல்வா் த. அறவாழி மற்றும் கல்லூரி பேராசியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தாயகம் திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்!

மும்பையில் விளம்பரப் பதாகை சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

புத்தம் புது காலை! ஸ்ருஷ்டி..

பாக்கியலட்சுமி வில்லி! ரேஷ்மா..

SCROLL FOR NEXT