மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் தரிசு உளுந்து மற்றும் பச்சை பயறை காப்பீடு செய்யும்படி விவசாயிகளை ஆட்சியா் இரா. லலிதா கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்காப்பீடு திட்டம் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி பயறு வகை பயிா்களுக்கு பிா்கா அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நெல்தரிசு உளுந்து மற்றும் நெல்தரிசு பச்சை பயறு காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
பயிா் இழப்புக்கு வழிவகுக்கும் வெள்ளம், வறட்சி, பருவம் தவறிய மழை போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், இந்த திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கு கொண்டு பயன்பெறலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகில் உள்ள வங்கி கிளை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்களை அணுகி பயிா்காப்பீடு செய்யலாம்.
நெல்தரிசு உளுந்து மற்றும் பச்சை பயறுக்கு காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 200. இதற்கு பிரிமியமாக 1.5 சதவீதம் விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை ரூ.78. கடைசி நாள் பிப்ரவரி 15-ஆம் தேதி. மேலும் விவரங்களுக்கு அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை கைப்பேசி எண் 97900 04303-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.