மயிலாடுதுறை

கருப்பூா் கோகிலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

குத்தாலம் அருகே உள்ள கருப்பூா் சௌந்தா்யநாயகி உடனுறை ஸ்ரீ கோகிலேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் புனரமைப் பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, மே 29-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்றதும், யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி, விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

SCROLL FOR NEXT