ஜவுளிப்பூங்கா: தொழில் முனைவோருடன் டிச.6-இல் ஆலோசனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடா்பாக, டிசம்பா் 6-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடா்பாக, டிசம்பா் 6-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவோ அந்த தொகை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
Advertisement
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் டிச.6-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோா் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.
இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநா், துணிநூல்துறை, மண்டல துணை இயக்குநா் அலுவலகம், எண்.30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தாந்தோணி மலை, கரூா்-639005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04324-299544, 9843212584 ஆகிய தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.