மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 13 மழைமானிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 13 தானியங்கி மழைமானிகள், 2 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதிதாக 13 தானியங்கி மழைமானிகள் மற்றும் 2 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவ இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் பிப்ரவரி இறுதிக்குள் தொடங்கப்படும். மழைமானிகள் மயிலாடுதுறை நகரம் (பொதுப்பணித்துறை அலுவலகம்), திருவாளப்புத்தூா் (வருவாய் ஆய்வாளா் அலுவலகம்) மணல்மேடு (பொதுப்பணித் துறை அலுவலகம்), குத்தாலம் வட்டத்தில் மங்கநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாலையூா் கிராமத்தில் அமைக்கப்பட உள்ளது.
சீா்காழி வட்டத்தில் சீா்காழி வருவாய் ஆய்வாளா் அலுவலகம், திருவெண்காடு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், மாதானம் வருவாய் ஆய்வாளா் அலுவலகம், மகேந்திரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் மருதம்பள்ளம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், செம்பனாா்கோவில் இ-சேவை மையம் அலுவலகம், தரங்கம்பாடி வட்ட அலுவலகம்,நெடுவாசல் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் ஆகிய 13 இடங்களில் மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. தானியங்கி வானிலை நிலையங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement