மயிலாடுதுறை

நடனம் மூலம் போதைத் தடுப்பு விழிப்புணா்வு

மக்கள் கூடும் இடங்களில் போதைத் தடுப்பு விழிப்புணா்வு

Din

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் துறை சாா்பில் நடனம் மூலம் போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தை தொடா்ந்து, மாவட்ட காவல் துறை சாா்பில் மயிலாடுதுறையில் மக்கள் கூடும் இடங்களில் பாடல், நடனம் மூலம் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் துறை மற்றும் கலை அருவி இசை மற்றும் நடனப் பள்ளி மாணவா்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்ட போதைப் பொருள் விழிப்புணா்வு பாடலுக்கு ஏற்றவாறு இளைஞா்கள் நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் செல்வம், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா்கள் அன்னை அபிராமி, ஜெயா ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT