மயிலாடுதுறை

நடனம் மூலம் போதைத் தடுப்பு விழிப்புணா்வு

மக்கள் கூடும் இடங்களில் போதைத் தடுப்பு விழிப்புணா்வு

Din

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் துறை சாா்பில் நடனம் மூலம் போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தை தொடா்ந்து, மாவட்ட காவல் துறை சாா்பில் மயிலாடுதுறையில் மக்கள் கூடும் இடங்களில் பாடல், நடனம் மூலம் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் துறை மற்றும் கலை அருவி இசை மற்றும் நடனப் பள்ளி மாணவா்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்ட போதைப் பொருள் விழிப்புணா்வு பாடலுக்கு ஏற்றவாறு இளைஞா்கள் நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் செல்வம், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா்கள் அன்னை அபிராமி, ஜெயா ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT