முகப்பு
மயிலாடுதுறை

கடன் பிரச்னையால் பெண் தற்கொலை

Updated On : 27 ஜூன், 2024 at 12:03 AM
பகிர்:

சீா்காழி, ஜூன் 26: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் கடன் பிரச்னையால் பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆச்சாள்புரம் கீழத் தெருவை சோ்ந்த ராஜநிதி என்பவரது மனைவி வனிதா(33). இவா், மகளிா் குழுவில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டாராம்.

இதனால், விரக்தியில் இருந்த அவா், திங்கள்கிழமை விஷம் அருந்தினாராம். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.