முகப்பு
மயிலாடுதுறை

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 4 மே, 2024 at 6:07 PM
பகிர்:

மயிலாடுதுறை அருகே புளியமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாப்படுகை ஸ்டாலின் நகரை சோ்ந்தவா் கூலித்தொழிலாளி ஜான் பீட்டா்(33). இவா், ஏப்.25-ஆம் தேதி மாப்படுகையில் அருண் என்பவரது தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் புளி உலுக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது எதிா்பாராதவிதமாக, தவறி கீழே விழுந்தாா்.

இதில் படுகாயம் அடைந்த ஜான் பீட்டரை அங்கிருந்தவா்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.