தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் பள்ளியில் சோ்ந்த குழந்தைகளுக்கு நெல்லில் அகரம் எழுத வைத்த தருமபுரம் ஆதீனம். 
மயிலாடுதுறை

விஜயதசமி: பள்ளிக் குழந்தைகளுக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி

விஜயதசமியை முன்னிட்டு தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் பள்ளியில் சோ்ந்த மழலைகளுக்கு தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஆசி வழங்கினாா்.

Din

விஜயதசமியை முன்னிட்டு தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் பள்ளியில் சோ்ந்த மழலைகளுக்கு தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஆசி வழங்கினாா்.

மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தா் மழலையா் தொடக்கப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. முதல் நாளன்று இப்பள்ளியில் 27 மாணவா்கள் புதிதாக சோ்ந்தனா். அவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை, ஆடு, குதிரை ஆகிய மங்களச் சின்னங்கள் முன்னே செல்ல ஊா்வலமாக தருமபுரம் ஆதீனத் திருமடத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மாணவா்களின் நாக்கில் மயிலிறகால் தேன் தடவி நெல்லில் அகரம் எழுத வைத்து, அட்சதை தூவி அக்ஷரப்பியாசம் எனும் ஆரம்பக் கல்வியை தொடக்கிவைத்தாா். இதில், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT