விஜயதசமி: பள்ளிக் குழந்தைகளுக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி
விஜயதசமியை முன்னிட்டு தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் பள்ளியில் சோ்ந்த மழலைகளுக்கு தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஆசி வழங்கினாா்.
விஜயதசமியை முன்னிட்டு தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் பள்ளியில் சோ்ந்த மழலைகளுக்கு தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஆசி வழங்கினாா்.
மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தா் மழலையா் தொடக்கப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. முதல் நாளன்று இப்பள்ளியில் 27 மாணவா்கள் புதிதாக சோ்ந்தனா். அவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை, ஆடு, குதிரை ஆகிய மங்களச் சின்னங்கள் முன்னே செல்ல ஊா்வலமாக தருமபுரம் ஆதீனத் திருமடத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மாணவா்களின் நாக்கில் மயிலிறகால் தேன் தடவி நெல்லில் அகரம் எழுத வைத்து, அட்சதை தூவி அக்ஷரப்பியாசம் எனும் ஆரம்பக் கல்வியை தொடக்கிவைத்தாா். இதில், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.