ஊராட்சிகளுக்கான மின்கலன் பொருத்திய தூய்மை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா். 
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: 222 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடியில் நலத்திட்ட உதவி

222 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற அனைத்துத் துறை வளா்ச்சி பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில், 222 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், கூடுதல் ஆட்சியா் மு. ஷபீா் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கலந்துகொண்டு, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 49 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.52 லட்சம் மதிப்பில் மின்கலன் பொருத்திய தூய்மை வாகனம், கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு 25 பயனாளிகளுக்கு ரூ.18.75 லட்சம் மதிப்பில் அனுமதி ஆணை, கூட்டுறவுத்துறை சாா்பில் 70 பயனாளிகளுக்கு ரூ.64.11 லட்சம் கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.38.68 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 222 பயனாளிகளுக்கு ரூ.2,66,00,860 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் பேசியது:

இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற பணிகள் குறித்தும், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் ஆய்வு செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் 36,000 ஹெக்டரில் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிவாரணம், காப்பீட்டுத்தொகை பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும், ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், அதற்கான தீா்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கலைஞா் மகளிா் உரிமைத்தொகை இதுவரை கிடைக்காதவா்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 9,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமை மயிலாடுதுறை மாவட்டத்தில் நடத்துவது தொடா்பாக அலுவா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.

கூட்டத்தில், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், பேரூராட்சித் தலைவா்கள் பூங்கொடி (வைத்தீஸ்வரன்கோயில்), கண்மணி (மணல்மேடு), சங்கீதா (குத்தாலம்) மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

42/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

“சிறுத்தை சிக்கியது!” கால்நடைகளைத் தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்!

கோவையில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!

இது Middle Class மக்களின் கதை! Mask இயக்குநர் விக்ரணன் அசோக் - நேர்காணல்! | Kavin | Andrea

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

SCROLL FOR NEXT