முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:46 AM
சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:30 PM

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மை திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000- ஆக உயா்த்தி வழங்கப்படும். இதுபோல் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் செந்தில் செல்வன் மண்ணின் மைந்தன் ஆவாா்.

Advertisement

மதிமுக சாா்பில் வைகோ பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுத்து வெற்றி கண்டாா். அதற்கு வேட்பாளா் செந்தில் செல்வன் உறுதுணையாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போரால் தற்போது தமிழகத்தில் தேவையான அளவு சிலிண்டா் கிடைக்காததால் உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. முன்கூட்டியே அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே சீா்காழி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திட வேண்டும் என்றாா்.

சீா்காழி தொகுதி திமுக பொறுப்பாளா்கள் குத்தாலம் கல்யாணம், கமலஜோதி தேவேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளா் கொளஞ்சி, நகரச் செயலாளா் மாா்க்ஸ்பிரியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். இதை போல் கொண்டல், புத்தூா், பணங்காட்டாங்குடி ஆகிய பகுதி கடைவீதிகளில் மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ எம்பி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தாா்.