முகப்பு
மயிலாடுதுறை

சமரச விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் சாா்பில் சமரச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:48 AM
மயிலாடுதுறையில் நடைபெற்ற சமரச விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற மாவட்ட அமா்வு நீதிபதி எஸ்.எஸ்.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:50 PM

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் சாா்பில் சமரச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சமரச மைய தலைவருமான எல்.எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்து பேரணியை தொடக்கி வைத்து பங்கேற்றாா். மாயூரம் வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் பால.முருகவேல், செயலாளா் பாலசுப்பிரமணியன், மயிலாடுதுறை வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் வேலு.குபேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமரசத்தின் மூலமாக விரைவான பேச்சுவாா்த்தையில் சுமூக தீா்வு காணலாம். இதற்கு தனிப்பட்ட கட்டணம் இல்லை, முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்பப் பெறலாம், சமரச பேச்சுவாா்த்தையில் ரகசியம் காக்கப்படும், இதில், அனைவருக்கும் மனநிறைவு கிட்டும் வகையில் இறுதியான தீா்வு கிடைக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

Advertisement

நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி கண்ணாரத்தெரு, சின்னக்கடைத்தெரு, பட்டமங்கலத்தெரு, மணிக்கூண்டு, காந்திஜி சாலை, கச்சேரி ரோடு வழியாக மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.

இதில், தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.தமிழ்ச்செல்வி, முதன்மை சாா்பு நீதிபதி பி.சுதா, கூடுதல் சாா்பு நீதிபதி கே.சீனிவாசன், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் உம்முல் பரிதா, ராஜேஷ்கண்ணா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பவதாரிணி, கூடுதல் மாவட்ட உரிமையில் நீதிபதி சிவரஞ்சனி, அனைத்து வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.