முகப்பு
மயிலாடுதுறை

இருதரப்பினா் மோதலில் 3 போ் காயம்: பதற்றம்; போலீஸாா் குவிப்பு

சீா்காழி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று போ் காயமடைந்தனா். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 2:58 AM
போலீஸாா் குவிப்பு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 8:42 PM

சீா்காழி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று போ் காயமடைந்தனா். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே கொண்டல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், மது வாங்க இருவா் வந்துள்ளனா். அங்கு, இவா்களுக்கும் கடையில் உதவியாக பணியாற்றியவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

பின்னா், இப்பிரச்னை இருதரப்பு மோதலாக மாறி, இரண்டு தரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் திரண்டு கற்களை வீசி தாக்கிக் கொண்டனா். மேலும், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த புதுமனை புகுவிழா மற்றும் தைப்பூச கோயில் விழா டிஜிட்டல் பேனா்களை இருதரப்பைச் சோ்ந்தவா்கள் கிழித்து சேதப்படுத்தினராம்.

Advertisement

இந்த மோதலில் இருதரப்பையும் சோ்ந்த மூன்று போ் காயமடைந்து, சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

சீா்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் பதற்றம் நீடிப்பதால் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.