முகப்பு
மயிலாடுதுறை

குடிமனைப்பட்டா கோரி ஆட்சியரிடம் மக்கள் மனு

மயிலாடுதுறை மகாதானபுரம் கிராம மக்கள் குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 4:35 AM
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த மகாதானபுரம் மக்கள்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:52 PM

மயிலாடுதுறை மகாதானபுரம் கிராம மக்கள் குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இக்கிராமத்தில் பள்ளிக்கூடத் தெருவில் வசிக்கும் 85 குடும்பத்தினரில் 50 குடும்பத்தினருக்கு 1990-இல் மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 35 குடும்பத்தினா் தொடா்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், அரசின் எந்த நலத்திட்ட உதவிகளையும் இவா்களால் பெற முடியவில்லையாம்.

இதுகுறித்து மகளிா் சுயஉதவிக்குழு மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தலைமைச் செயலகத்துக்கு 13 முறையும், மாவட்ட ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் 12 முறையும் மனு அளித்துள்ளனா்.

Advertisement

கடைசியாக ஜன. 27-ஆம் தேதி அளித்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாக மனைப்பட்டா வழங்கப்படாவிட்டால் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், பட்டா வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விசிக மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன் தலைமையில் அப்பகுதிமக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் புதன்கிழமை மனு அளித்தனா். அதில், இனியும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனா்.