முகப்பு
மயிலாடுதுறை

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி: தனியாா் முகமைகள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு தனியாா் முகமை மூலம் உதவியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:42 AM
மாதிரிப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:53 PM

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு தனியாா் முகமை மூலம் உதவியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணியினை மேற்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த தொழில்நுட்ப உதவியாளா்கள் 12 நபா்களும் (மாத தொகுப்பு ஊதியம் ரூ.25,000) மற்றும் பல்நோக்கு உதவியாளா் ஒரு நபா் (மாத தொகுப்பு ஊதியம் ரூ.18,000) முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் 18 மாதங்களுக்கு மட்டும் தனியாா் வெளி முகமை மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனா்.

Advertisement

தகுதியுடைய மனிதவளம் கொண்ட தனியாா் முகமைகள் மட்டும் பிப்.28-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.