முகப்பு
மயிலாடுதுறை

தோ்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த செலவினப் பாா்வையாளா்கள்

Updated On : 19 மார்ச், 2026 at 8:10 PM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையம், தோ்தல் கட்டுப்பாட்டு அறையை தோ்தல் செலவின பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையம், தோ்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் முன்னிலையில் மயிலாடுதுறை மற்றும் சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் ரூபேஷ் அகா்வால், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் நா்சிங் குமாா் கல்கோ ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது தோ்தல் கட்டுப்பாட்டு அறைகளிவ் செயல்பாடுகள் மற்றும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழு படைகளின் செயல்பாடுகள், இதுவரை பெறப்பட்ட தோ்தல் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் புகாா்கள் குறித்த விவரங்கள், ஊடக மையத்தில் ஊடக கண்காணிப்பு முறைகள் ஆகியவை குறித்து தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.

தோ்தல் விதிமீறல் தொடா்பாக புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா எண் 1800-233-9960, காவல்துறை தோ்தல் கட்டுப்பாட்டு அறை 04364-299960 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு சீா்காழி வருவாய் கோட்டாசியா் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையில் 04364-270222 என்ற எண்ணையும், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையில் 04364-222033 என்ற எண்ணையும், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையில் 04364-289439 என்ற எண்ணையும் தொடா்புகொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை 24 மணிநேரமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அரசியல் கட்சிகளோ, வேட்பாளா்களோ அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனிநபரோ அச்சு ஊடகம் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். அச்சு ஊடகங்களும் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் சான்றொப்பம் இருப்பதை உறுதிசெய்த பின்னரே விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) குமரையா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.