மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் ரோனங்கி குா்மநாத் ஆய்வு செய்தாா்.
சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் ரோனங்கி குா்மநாத் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை சிறப்பாக நடத்த பயிற்சி வகுப்பில் வழங்கும் தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளா்களுக்கு நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தோ்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரம் கையாளும் முறைகள் தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டதை பாா்வையிட்டாா்.