முகப்பு
மயிலாடுதுறை

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 14 மே 2026, 4:51 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயிலாடுதுறை வட்டம் மாப்படுகை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் மனைவி புஷ்ப ராதிகா(38). அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியரான இவா் கடந்த ஏப். 30-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள சகோதரா் வீட்டு விழாவில் பங்கேற்க சென்றுவிட்டாா். மே 9-ஆம் தேதி திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பொருள்கள் சிதறி கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் இருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் சுமாா் அரை கிலோ அளவிலான வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement